Home இலங்கை மகனைக் கடத்தியவா் காவல்துறையினாின் துப்பாக்கிச் சூட்டில் பலி

மகனைக் கடத்தியவா் காவல்துறையினாின் துப்பாக்கிச் சூட்டில் பலி

by admin

ஹொரணை – கந்தான பகுதியில், பாட்டியின் பாதுகாப்பில் இருந்த 7 வயது சிறுவனைக் கடத்திச் சென்ற சிறுவனின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். வெல்லப்பிட்டி பகுதியில் சந்தேக நபருக்கும், காவல்துறையினருக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிலேயே குறித்த நபர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஹொரண நீலக்க என்ற குறித்த நபர், தனது மனைவியின் தாயாாின் பொறுப்பில் இருந்த தனது மகனை கடத்திச் சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துரைறயினா் தொிவித்துள்ளனா்.

சந்தேக நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது மனைவியின் கை-கால்களை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாகவும் அது தொடர்பில் சந்தேக நபரை கைதுசெய்ய காவல்துறையினா் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு குறித்த நபர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, தனது மகனை கடத்திச் சென்றதாகவும் இதன் போது அவருக்கும், காவல்துறையினருக்குமிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிலேயே அவா் உயிரழந்துள்ளதாக வும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More