Home இலங்கை யாழில் பூசாரி வீட்டில் திருடிய மூவர் கைது – திருட்டு நகைகளும் மீட்பு

யாழில் பூசாரி வீட்டில் திருடிய மூவர் கைது – திருட்டு நகைகளும் மீட்பு

by admin

யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பூசகர் ஒருவரின் வீட்டில் பட்டப்பகலில் வீடுடைத்து 24 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், வேலணையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நிலையில் திருட்டு நகைகள் காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளன.


கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில்  யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். விசாரணைகளின் அடிப்படையில், வேலணையைச் சேர்ந்த 24 வயதுடைய முதன்மைச் சந்தேக நபர் கஸ்தூரியார் வீதியில் வைத்து யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டார்.


முதன்மைச் சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வேலணையைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும் சுன்னாகத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும் என மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


முதன்மைச் சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையாகி தொடர்ச்சியாக திருட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டு வருவதாகப் காவல்துறையினர் குறிப்பிட்டனர். சந்தேக நபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More