Home இலங்கை வி.எஸ்.சிவகரனிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவில் 5 மணி நேரம் விசாரணை :

வி.எஸ்.சிவகரனிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவில் 5 மணி நேரம் விசாரணை :

by admin



தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் கொழும்பில் உள்ள கிருலப்பனை அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (18) சுமார் 5 மணி நேரம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரணைகளின் போது தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் செயற்பாடுகள்   தொடர்பிலும் கடந்த 10 ஆண்டுகளில் நடத்திய போராட்டங்கள் , கூட்டங்கள் தொடர்பான பல்வேறு விதமான கேள்விகளை முன்  வைத்ததாக அவர் தெரிவித்தார்.


 அதில் பல கேள்விகள் வெறும் கற்பனைக் கதையாக இருந்ததாக வி எஸ்.சிவகரன் தெரிவித்தார். எனவே இவ்விதமாக மூன்று மாதத்திற்கு ஒரு தடவை விசாரணை யை எதிர் கொள்வதாகவும் எமது ஜனநாயக ரீதியான செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த முனைவது நீதியான ஜனநாயக சட்ட ஆட்சிக்கு உகந்தவையாக தெரியவில்லை என உணர்கிறோம்.  கவலை அடைகிறோம்.

இவ்விதமாக பல சிவில் சமூக செயற் பாட்டாளர்களை தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்துவது என்பது சமூகத்தின் அடிப்படை நீதி பூர்வமான கருத்துரிமையும்  செயல்பாட்டையும் கேள்விக் குட்படுத்தி  அடிப்படை  வாழ்வுரிமையை வலிந்து நசுக்குவதாகவே எமக்கு புலப்படுகிறது.
அரசு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அடக்கு முறைச் செயற்பாட்டை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More