இலங்கை பிரதான செய்திகள்

கடற்படைத் தளத்திற்கு காணி வழங்க சிலா் இணக்கம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் கடற்படைத் தளத்திற்கான காணிசுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான காணியினை வழங்க சிலர் முன்வந்துள்ள போதிலும் பலர் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

வட்டுவாகல் கடற்படைத்தளத்திற்காக 671 ஏக்கர் காணியினை கையகப்படுத்த கோரப்பட்டுள்ள நிலையில் அதில் 292 ஏக்கர் அரச காணிகளாக காணப்பட்டுள்ள போதும் ஏனைய 379 ஏக்கர் காணி 35 தனிநபா்களுக்கு சொந்தமாக காணப்படுகின்றது.

இந்நிலையில் அவா்களில் 12 போ் காணி சுவீகரிப்பிற்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீட்டினை பெற்றுக்கொள்ள முன்வந்துள்ளதாகவும் 23 பேர் காணியினை வழங்க எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு வட்டுவாகல் கடற்படை தளத்தின் கணிசுவீகரிப்பு வர்த்தமானி அறிவித்தலின் படி தொடங்கப்பட்ட சுவீகரிப்பு நடவடிக்கை பிரிவு 5 சட்டத்தின் கீழ் நில அளவீடு முன்னெடுக்கப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாா்கள்.

காணி உரிமையாளர்கள் 23 பேர் இவ்வாறு தொடா்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ள போதிலும் காணியினை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.