Home உலகம் களியாட்ட விழாவில் கார் மோதி பெல்ஜியத்தில் ஏழு பேர் மரணம் – பாரிஸ் புறநகரில் குளிர்சாதன பெட்டிக்குள் சிசுக்கள்!! –

களியாட்ட விழாவில் கார் மோதி பெல்ஜியத்தில் ஏழு பேர் மரணம் – பாரிஸ் புறநகரில் குளிர்சாதன பெட்டிக்குள் சிசுக்கள்!! –

by admin

பெல்ஜியம் நாட்டில் தெருக் களியாட்ட திருவிழா ஒன்றில் சாரதி ஒருவர் காரைவேகமாகச் செலுத்தித் தாக்கியதில் ஏழுபேர் உயிரிழந்தனர். இருபது பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

பெல்ஜியத்தில் மிகவும் பிரபலமானவருடாந்த தெருவிழாவிலேயே (carnival of Strépy-Bracquegnies) இன்று விடிகாலை ஐந்து மணியளவில் இந்தச் சம்பவம்நடந்தது. களியாட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒரு நாட்டுப்புறக் குழுவினர் மீதுமிக வேகமாக வந்த கார் மோதியுள்ளது.

குழந்தை உட்பட நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று தென்பகுதிLa Louvière என்ற நகரத்தின் மேயர் தெரிவித்திருக்கிறார்.படுகாயமடைந்தவர்களில் மூவர் அவசர சிகிச்சைகளின் போது உயிரிழந்தனர்.

களியாட்ட மக்கள் மீது காரைக் கண்டபடிசெலுத்திய சாரதியை காவல்துறையினா் துரத்திச் சென்று கைதுசெய்தனர். இந்தத் தாக்குதலின் பின்னணியில் காவல்துறையினருடனான பகைமையோ அல்லது பயங்கரவாத நோக்கங்களோ இருப்பதாகத் தெரியவரவில்லை என்பதை விசாரணையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்

. குளிர்சாதன பெட்டிக்குள் சிசுக்கள்!! – பாரிஸ் புறநகரில் பெண் கைது!!

பாரிஸின் வல்-து-மான் பகுதியில் Marolles-en-Brie என்ற நகரில் வீடு ஒன்றில் உறை குளிர்சாதனப் பெட்டிக்குள் (congélateur) இருந்து இரண்டு சிசுக்களின் உடல்களைப் காவல்துறையினா் மீட்டிருக்கின்றனர். அந்த வீட்டில் வசிக்கும் முப்பது வயதுடைய பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

பெண்ணுடன் அதேவீட்டில் இணைந்து வசிக்கின்ற ஆண் ஒருவரே வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டிக்குள் இரண்டு சிசுக்களின் சடலங்கள் உறைந்த நிலையில் கிடைப்பதைக் கண்டு உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் வழங்கினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு சிசுக்களும் எப்போது இறந்தன என்பது தெரியவரவில்லை. அவை இரட்டைக் குழந்தைகளாக இருக்கலாம் என்று காவல்துறையினா் சந்தேகிக்கின்றனர்.அது உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை. தகவலை வழங்கிய ஆண் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் என்றும் அவருக்கும் கைதான பெண்ணுக்கும் குழந்தைகள் இல்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டு சிசுக்களும் அந்தப் பெண்ணின் முந்தைய கணவருடையவையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்தத் தகவல்களை வெளியிட்டிருக்கும் பரிஷியன் செய்தி நிறுவனம் மேலதிகவிசாரணைகள் நடத்தப்பட்டுவருவதாகதெரிவித்துள்ளது

.——————————————————————–

குமாரதாஸன். 20-03-2022பாரிஸ்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More