Home இலங்கை எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மயங்கிவிழுந்து மரணிக்கும் சம்பவங்கள்

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மயங்கிவிழுந்து மரணிக்கும் சம்பவங்கள்

by admin

இலங்கையில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் நிற்பவர்கள் மயங்கிவிழுந்து மரணிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த சனிக்கிழமை, வத்தேகம- உட.தலவின்ன பகுதியில் 71 வயதான நபா் ஒருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், இன்று கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்றுக்கொண்டிருந்த 70 வயதான ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளாா்.

இதேவேளை நேற்றிரவு நிட்டம்புவ – ஹொரகொல்ல பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் ஏற்பட்ட சண்டை காரணமாக கத்தி குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதிக்கும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இவ்வாறு கத்திக்குத்து இடம்பெறக் காரணம் என காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

சம்பவத்தில் 29 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநரே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More