Home இலங்கை புன்னாலைக்கட்டுவனில் டீசலுக்கு காத்திருந்த பேருந்து சில்லில் அகப்பட்டு பயணி உயிரிழப்பு!

புன்னாலைக்கட்டுவனில் டீசலுக்கு காத்திருந்த பேருந்து சில்லில் அகப்பட்டு பயணி உயிரிழப்பு!

by admin

எரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்தின் கீழ் இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்த பயணி, சாரதியின் கவனக்குறைவினால் பேருந்து சில்லு ஏறி உயிரிழந்துள்ளார் .
புன்னாலைக்கட்டுவன் எரிபொருள் நிரப்புநிலையத்தில், நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஊரெழு கிழக்கைச் சேர்ந்த தர்மலிங்கம் சதீஸ் ( வயது 37 ) என்பவரே உயிரிழந்தார் .
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 


உயிரிழந்த பயணி யாழில் இருந்து  வயாவிளான் நோக்கி பேருந்தில் பயணித்துள்ளார். பயணத்தின் போது, பேருந்தில் தூங்கியமையால்,  வயாவிளானில் இறங்கவில்லை . பேருந்து நடத்துனரும், அதனை கவனிக்கவில்லை .


அவர் மீண்டும் வசாவிளான் செல்வதற்காக யாழ்ப்பாணம் நோக்கி மீண்டும் பேருந்தில் பயணித்த போது , புன்னாலைக்கட்டுவனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுக்காக வரிசையில் பேருந்து காத்திருந்துள்ளது. அதன் போது , குறித்த பயணி பேருந்தில் இருந்து  கீழே இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்துள்ளார் . அதனை அவதானிக்காக சாரதி பேருந்தை எடுத்த போது பயணி மீது பேருந்து ஏறியுள்ளது .


பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து, பேருந்து சாரதி அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More