93
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் அவரது அரசாங்கத்துக்கெதிராக கொழும்பு காலி முகத்திடலில் 7வது நாளாக இன்றும் (15) போராட்டம் தொடர்கிறது. கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் நாடளாவிய ரீதியிலான இளைஞர்கள் இரவு பகலாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடாரங்களை அமைத்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனா்.
சித்திரை புத்தாண்டை தினமான நேற்று பெரும் எண்ணிக்கையிலான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையி்ல் இன்றும் காலி முகத்திடல் மற்றும் காலி வீதியில் மக்கள் திரண்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love