
தம்புள்ளை – வேமதில்ல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர்கள் இருவா் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். 4 பேர் பயணித்த மோட்டார் சைக்கிள் குளத்தில் வீழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளின் வேகம் கட்டுப்பாட்டை இழந்தமையினால் குறித்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
உயிரிழந்தவர்கள் கலேவெல, புவக்பிட்டிய, நபடகஹாவத்த பகுதியைச் சேர்ந்த பிசுல் ஹபீக் ஹம்னிதாஸ் (வயது 16) மற்றும் நவ்சாத் அலி முசாபிக் (வயது 16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்த ஏனைய இருவரும் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love
Add Comment