
ரம்புக்கனை சம்பவத்தின் போது, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்கு உத்தரவிட்ட சிரேஷ்ட காவல்துறை அதிகாரியை கைது செய்யுமாறு, காவல்துறை மா அதிபருக்கு கேகாலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கேகாலை நீதிமன்ற மருத்துவ அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம், ரம்புக்கனை சம்பவத்தில் உயிாிழந்தவா் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகியே உயிாிழந்துள்ளார் என நீதிமன்றத்தில் இன்று (27) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டததனையடுத்தே நீதவான் இவ்வாறு உத்தரவை பிறப்பித்துள்ளாா்.
Spread the love
Add Comment