Home இலங்கை யோஷித நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார் – முக்கிய பிரமுகர்கள் ஜெட் விமானம் மூலம் வெளிநாட்டுக்கு

யோஷித நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார் – முக்கிய பிரமுகர்கள் ஜெட் விமானம் மூலம் வெளிநாட்டுக்கு

by admin

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ நேற்று (9) அதிகாலை நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவித்துள்ளன. யோஷிதவும் அவரது மனைவியும் சிங்கப்பூர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவா்களது தனிப்பட்ட வாகனத்தில் விமான நிலையத்துக்கு சென்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது..

அதேவேளைஅரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் திருகோணமலை படைத்தளம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ,அவர்கள் அங்கிருந்து ஜெட் விமானம் ஒன்றின் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதற்காக இவர்கள் கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் குறித்த தகவல்கள் தொிவிக்கின்றன. கூறப்படுகின்றது

மேலும் கட்டுநாயக்க விமானநிலையத்தின் ஊடாக அரசியல்வாதிகள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக, விமான நிலையத்துக்கு நுழையும் வீதிகளில் இளைஞர்கள் காத்திருக்கின்றனர் எனவும் அவர்களுடன் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் பெருந்திரளான இளைஞர்களும் இணைந்துள்ளனர் எனவும் தகவல்கள் தொிவிக்ின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More