Home இலங்கை இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீட்சி பெற அதிகபட்ச ஒத்துழைப்புகள் வழங்கப்படும்!

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீட்சி பெற அதிகபட்ச ஒத்துழைப்புகள் வழங்கப்படும்!

by admin

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீட்சி பெற அதிகபட்ச ஒத்துழைப்புகளை இந்திய அரசாங்கம் வழங்கும் என இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய தூதுக்குழுவினர், ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்த போதே இந்த உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கடனுதவியின் கீழ் எரிபொருள், மருந்துப்பொருட்கள், உரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தற்போதும் இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் மீளாய்வு செய்த இந்திய தூதுக்குழுவினர், இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு, இலங்கை அரசும் அரசியல்வாதிகளும் அர்ப்பணிப்புடன் உள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த உதவிகளுக்காக இலங்கை அரசினதும் மக்களினதும் நன்றிகளை இந்திய தூதுக்குழுவிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய செயற்றிட்டங்கள் குறித்து இரு தரப்பிற்கும் இடையில் நீண்ட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றுள்ளமை நோக்கத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More