Home இலங்கை மண்டபம் அகதிகள் முகாமில் இலங்கை தமிழ் இளைஞர் தற்கொலை

மண்டபம் அகதிகள் முகாமில் இலங்கை தமிழ் இளைஞர் தற்கொலை

by admin


 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் கடந்த 2006 ஆம் ஆண்டு ராணி என்ற பெண் ஒரு மகன் மற்றும் மூன்று பெண் பிள்ளைகளுடன் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு சென்று மண்டபம் அகதிகள்  மறுவாழ்வு  முகாமில் தங்கி வசித்து வருகின்றார்.

குறித்த பெண்ணின் மகனான 22 வயதுடைய இளைஞர் நிரோஷன் பெயிண்டிங் வேலை செய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு  முகாமில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு செல்போனில் கேம் விளையாடி சுற்றித் தெரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆத்திரமடைந்த தாய் தனது மகனை கேம் விளையாடுவதை விட்டுவிட்டு வேலைக்கு செல்லுமாறு கண்டித்ததாகவும் அதனால் மனம் உடைந்த இளைஞர் தனது வீட்டில் இருந்த எலி மருந்தை  தண்ணீரில் கலந்து வீட்டிற்கு பின்புறம் வைத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  குடித்து விட்டு படுத்து கிடந்துள்ளார்.

இதையடுத்து மயக்க நிலையில் இருந்த  நிரோஷனை அவரது நண்பர்கள் மண்டபம்  முகாமில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அவரை பரிசோதித்த  மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து உயிரிழந்த இளைஞரின் உடலை  உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கு கொண்டு வரும் பணியில் காவல்துறையினா் ஈடுபட்டு வருகின்றனர்

உயிரிழந்த இளைஞரின் சகோதரி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More