Home இலங்கை தொழில் முதலீட்டுக்காக பூஜையில் வைத்து எடுத்த பணம் வழிப்பறி – யாழில் சம்பவம்!

தொழில் முதலீட்டுக்காக பூஜையில் வைத்து எடுத்த பணம் வழிப்பறி – யாழில் சம்பவம்!

by admin

தொழிலில் முதலீடு செய்வதற்காக ஆலயத்தில் பூஜையில் வைத்து எடுத்த 10 இலட்ச ரூபாய் பணத்தினை இருவர் வழிப்பறி கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.  யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் ஆலயம் முன்பாக நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 


யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தான் புதிதாக தொடங்கவிருந்த தொழில் முயற்சிக்கு முதலீடு செய்வதற்கான 10 இலட்ச ரூபாய் பணத்தினை முனியப்பர் ஆலயத்தில் பூஜையில் வைத்து எடுத்து தருமாறு பூசகரிடம் கொடுத்துள்ளார்.  பூசகரும் அவரின் வேண்டுதலின் பிரகாரம் அந்த பணத்தினை பூஜையில் வைத்து எடுத்துக்கொடுத்துள்ளார். 


பூஜையில் வைத்து எடுத்த பணத்தினை பூசகரிடம் வாங்கிக்கொண்டு ஆலயத்திற்கு வெளியில் வருவதற்கு இடையில் அங்கு நின்றிருந்த இருவர் அப்பணத்தினை பறித்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். 


சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More