Home இலங்கை யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையை சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்

யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையை சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்

by admin

இலங்கையில் இருந்து இரு குடும்பங்களை சேர்ந்த  07 பேர் கடல் வழியாக தமிழகத்திற்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர்.  இலங்கையில் இருந்து கூட்டி செல்லப்பட்ட 07 பேரை தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள ஐந்தாம் மணல் திட்டில் இறக்கி விட்டு படகோட்டிகள் தப்பி சென்ற நிலையில் தகவல் அறிந்த தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினர் அவர்களை மீட்டு , மண்டபம் கடலோர பாதுகாப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 


யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவரும் , திருகோணமலை ஆனந்தபுரி பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வருமே தமிழகம் சென்றுள்ளனர். 
பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி,  இலங்கையில் இருந்து கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 123 பேர் தமிழகம் சென்று தஞ்சமடைந்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More