Home இலங்கை காலிமுகத்திடல் போராட்டத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைது!

காலிமுகத்திடல் போராட்டத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைது!

by admin

கொழும்பு- காலிமுகத்திடல் போராட்டக்களத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என நுவரெலியா காவற்துறை பதில் பொறுப்பதிகாரி சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்து பொருள்களுக்கு சேதம் விளைவித்தமைக்கு எதிராகவே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்வதற்கு நுவரெலியா நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டிருந்ததாகவும் காவற்துறை யினர் தெரிவித்தனர்.

இதற்கமைய குறித்த சந்தேகநபரை கைதுசெய்வதற்கு அவரது வீட்டுக்கு சென்ற காவற்துறைனர், அங்கு மேலும் 4 பேர் மறைந்திருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, அவர்களும் இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஐந்து சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பிங்கிரிய, கொதட்டுவ, களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சந்தேகநபர்கள் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More