Home இலங்கை யாழில் எரிபொருள் பெற காவல்துறையினருக்கு கட்டுப்பாடு! 

யாழில் எரிபொருள் பெற காவல்துறையினருக்கு கட்டுப்பாடு! 

by admin

காவல்துறையினரின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கே எரிபொருள் நிரப்புவது எனவும் , அவர்களின் தனிப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் பெற காவல் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக பிரதேச செயலரின் அனுமதி பெறப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை மாவட்ட செயலரின் தலைமையில்  பிரதேச செயலர்கள், இ.போ.ச. வடபிராந்திய முகாமையாளர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய முகாமையாளர், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள், காவல்துறையினர் ஆகியோருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. 

அதன் போது ,  பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காவல்துறையினர் தமது தனிப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

அது தொடர்பில் பிரதேச செயலர்களால், எந்தெந்த காவல்நிலையத்தினர் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்ற விவரமும், முன்வைக்கப்பட்டது. 

இதனையடுத்து காவல்துறையினரின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்கு அனுமதிப்பது என்றும், அலுவலகத் தேவைக்கு தமது தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தும் காவல்துறையினரின் விவரங்களை காவல்நிலைய பொறுப்பதிகாரி ஊடாக பிரதேச செயலகத்துக்கு சமர்ப்பித்து, பிரதேச செயலரின் அனுமதி பெற்றே அதற்கு எரிபொருள் நிரப்பலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More