Home இலங்கை குற்றம்சாட்டப்பட்ட இலங்கை இராணுவ அதிகாரிகளை கைது செய்யுங்கள்!

குற்றம்சாட்டப்பட்ட இலங்கை இராணுவ அதிகாரிகளை கைது செய்யுங்கள்!

by admin
Michele Bachelet, Presidente of Chile speaks during Special Session of the Human Rights Council. 29 March 2017.


இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்சிலெட் வலியுறுத்தியுள்ளார்.

அதற்காக சர்வதேச நீதிக் கட்டமைப்பை பயன்படுத்துமாறும் 47 நாடுகளின் தலைவர்களிடம் மிச்சேல் பச்சிலெட் கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட 58 இராணுவத்தினரையும் கைது செய்ய இலங்கை அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிக் காட்டிய அவர், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் அசமந்த போக்கு குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை தற்போது இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே இலங்கை இராணுவ அதிகாரிகள் தற்போது செல்லமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More