Home இலங்கை அனைத்து கட்சிகளுக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய, ஆட்சிக் கட்டமைப்பை தயாரிப்பதே நோக்கம்!

அனைத்து கட்சிகளுக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய, ஆட்சிக் கட்டமைப்பை தயாரிப்பதே நோக்கம்!

by admin

அனைத்து கட்சிகளுக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை தயாரிப்பதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பல தரப்பினருடன் நேற்று (10.08.22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய பேரவையை ஸ்தாபிப்பதே பிரதான இலக்கு என சுட்டிக்காட்டிய அவர், அதற்கு சகல கட்சிகளின் பிரதிநிதித்துவமும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

குழு அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதா அல்லது அரசாங்கத்துடன் இணைவதா என்பதை அந்தந்த தரப்பினர் கலந்துரையாடி தீர்மானித்ததன் பின்னர் தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More