Home இலங்கை நல்லைக்குமரன் நூல் வெளியீடும் , யாழ் விருது வழங்கலும்

நல்லைக்குமரன் நூல் வெளியீடும் , யாழ் விருது வழங்கலும்

by admin

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழாவும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நாவலர் மண்டபத்தில் இடம் பெற்றது.

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகாரக்குழு வழங்கி கௌரவிக்கின்ற “யாழ் விருது” இந்த ஆண்டு திருக்கேத்தீச்சர ஆலய திருப்பணிச் சபையினருக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் சைவத்திற்கும் , தமிழுக்கும், சமூகத்திற்கும் தொண்டாற்றியவர்களைக் கௌரவித்து ‘ யாழ்.விருது’ வருடா வருடம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இவ்வாண்டு ஈழத்தின் வரலாற்று சிறப்பு மிக்க, சமய குரவர்களின் பாடல் பெற்ற, சிவத்தலமான, திருக்கேதீச்சர ஆலய கும்பாபிஷேகப் பணிகளினை ஆற்றி ஈழத்தில் சைவ சமயம் மறுமலர்சியுற துணை செய்து இறைபணி புரிந்த திருக்கேத்தீச்சர ஆலய திருப்பணிச் சபையினருக்கு யாழ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு ஆலய திருப்பணிக்கு நிதியுதவினை ஆற்றிய இந்திய அரசனை கௌரவிக்கும் முகமாக யாழ் இந்திய துணை தூதுவருக்கு கௌரவிப்பு விருதும் வழங்கிவைக்கப்பட்டது. விருது வழங்கலை அடுத்து  நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழா இடம்பெற்றது. 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More