83
பங்ககாளிக் கட்சிகளின் சுயாதீன ஐக்கிய புதிய கூட்டமைப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி மஹரகம தேசிய இளைஞர் சேவை மண்டப வளாகத்தில் அறிமுகம் செய்யப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அதன் தலைவராக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் சுயாதீனக் கட்சிக் கூட்டணியின் வாராந்தக் கூட்டம் நேற்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
Spread the love