Home இலங்கை தொழிற்சாலையில் ஒன்றரைக் கோடி கொள்ளை -ஐவர் கைது

தொழிற்சாலையில் ஒன்றரைக் கோடி கொள்ளை -ஐவர் கைது

by admin

சுமார் ஒரு கோடியே 50 இலட்சம்  பெறுமதியான மோட்டார் மற்றும்  மின் உபகரணங்களை கொள்ளையிட்டு சென்ற 5 சந்தேக நபர்கள் காரைதீவு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு காவல்துறைஎல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி  பகுதியில் உள்ள உருக்கு இரும்பு தொழிற்சாலையில் இக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை  குறித்த தொழிற்சாலையின் பாதுகாப்பிற்காக போடப்பட்ட பூட்டுக்கள் உடைக்கப்பட்டு நுணுக்கமாக பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து உரிமையாளர் தொழிற்சாலையில் பாரிய கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முறைப்பாடு ஒன்றினை அன்றைய தினம்  காரைதீவு காவல் நிலையத்தில் வழங்கி இருந்தார்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய  விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினரால் கொள்ளைச் சம்பவத்தில் பிரதான  சந்தேக நபர்  இனங்காணப்பட்ட நிலையில் அவரை   தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட காவல்துறைக் குழு அவரை அணுகி புலனாய்வு நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்நிலையில் பல வருடங்களாக குறித்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த  சந்தேக நபர் இன்று (22) திங்கட்கிழமை அதிகாலை  கைதானதுடன் கொள்ளைச்சம்பவத்திற்கு உடந்தையாக செயற்பட்ட ஏனைய நால்வர்  கைதாயினர்.

இவ்வாறு கைதான  21 ,25 ,36 ,48 ,34 ,  வயதான சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய கொள்ளையடித்து செல்லப்பட்ட சுமார் 1 கோடியே 50 இலட்சம் பெறுமதியான மோட்டார் உட்பட  உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் கைதான சந்தேக நபர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையானதுடன் மீட்கப்பட்ட  சான்று பொருட்கள் யாவும்   நீதிமன்ற நடவடிக்கைக்காக எடுத்து காவல் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More