Home இலங்கை நல்லூர் தேர் திருவிழாவில் 30 பவுண் நகை களவு – ஐவர் கைது

நல்லூர் தேர் திருவிழாவில் 30 பவுண் நகை களவு – ஐவர் கைது

by admin

நல்லூர் ஆலய தேர்த்திருவிழாவின் போது 30 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ள நிலையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவனும் நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நல்லூர் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.  அதன் போது பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

அந்நிலையில் கூட்ட நெரிசல்களை பயன்படுத்தி இரண்டு தாலிக்கொடிகள் உள்ளிட்ட சுமார் 30 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளன. ஆலய உற்சவ கால காவல்துறைப் பணிமனையில் 07 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அதேவேளை பெண்ணொருவரின் சங்கிலியை அறுக்க முற்பட்ட வேளை கையும் களவுமாக பெண்ணொருவர் சிவில் உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த  காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்டார். 

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்தவர் எனவும் , அவருடன் ஆலயத்திற்கு வருகை தந்திருந்த மேலும் மூன்று பெண்களும் காவல்துறையினரால் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர் .

அதேவேளை ஆலய சூழலில் திருட்டுக்களில் ஈடுபட்ட குற்றத்தில் சிறுவன் ஒருவனும் கைது செய்யப்பட்டுள்ளாா். 

கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரையும் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More