Home இலங்கை தலைமன்னாரில் மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் கைது.

தலைமன்னாரில் மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் கைது.

by admin


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களை நேற்று சனிக்கிழமை (27.08.22) இரவு தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கையின் தலைமன்னார் கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லைக் கோடு ஊடாக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் குறித்த 06 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயன்படுத்திய இழுவை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

-கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேரும் இன்று ஞாயிற்றுக்கிழமை (28.08.22) காலை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழிவ் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலை்படுத்தப்பட உள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More