Home இலங்கை 6 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

6 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

by admin

 


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று திங்கட்கிழமை (29) உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களை கடந்த சனிக்கிழமை (27) இரவு தலைமன்னார் கடற்பரப்பில்  கடற்படை கைது செய்துள்ளனர்.

  தலைமன்னார் கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லைக் கோடு ஊடாக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் குறித்த   06 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயன்படுத்திய இழுவை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை தலைமன்னார் கடற் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட கடற்தொழிவ் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை (29) காலை குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தினர்.

-இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை(12-09-2022) 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More