Home இலங்கை விபத்தில் பல்கலைக்கழக மாணவி உயிாிழப்பு

விபத்தில் பல்கலைக்கழக மாணவி உயிாிழப்பு

by admin

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் இன்று(31) காலை இடம்பெற்ற விபத்தில் விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழக மாணவி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வாகனமொன்றுடன் மோதுண்டு  ஸ்தலத்தில்  மரணமடைந்துள்ளாா்.   காயமடைந்த மாணவியின் கணவர் தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் காத்தான்குடி 5ஆம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய  அக்பர் அலி பாத்திமா அஸ்பா  என்பவரே இவ்வாறு உயிாிழந்துள்ளாா்.

 சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்டார்.

விபத்தில்  பல்கலைக்கழக மாணவியின்   தலைப்பகுதியில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது என  பிரேத பரிசோதனையில’ குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More