Home சினிமா பிரபல பாடகர் பாம்பா பாக்யா காலமானார்.

பிரபல பாடகர் பாம்பா பாக்யா காலமானார்.

by admin

தென்னிந்தியாவின் பிரபல பாடகர் பாம்பா பாக்யா (வயது 49) காலமானார். சுகயீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளாா் , ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான இராவணன் திரைப்படத்தில் தமிழில் அறிமுகமான அவா் அதனைத் தொடர்ந்து, ரஹ்மானின் இசையில், 2.O, பிகில், சர்கார், பொன்னியின் செல்வன் -1 உள்ளிட்ட படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானார்.

பிகில் படத்திலிருந்து காலமே காலமே பாடலை பாடியதன் மூலம் மக்களை உருக வைத்த இவர் ராட்டி ஆல்பம் மூலம் இளைஞர்களை கவர்ந்தார் . அண்மையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் பொன்னி நதி பாடலின் ஆரம்ப வரிகளை இவர் பாடியுள்ளதுடன் மற்றொரு பாடலையும் பாடியதாக தெரிவிக்கப்படுகிறது .

பாடகர் பம்பா பாக்யா உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளதனை இசையமைப்பாளர் ஏ .ஆர். ரகுமானின் மகள் கஜிதா ரஹ்மான்  சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். உடல் நலக்குறைவால் நேற்றிரவு 12.30 மணி அளவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.   எனத் தொிவிக்கப்படுகின்றது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More