Home இலங்கை ராஜபக்சக்களை பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளது!

ராஜபக்சக்களை பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளது!

by admin

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ராஜபக்சவினரை அரசியலுக்கு வரவழைப்பதற்காக தரை விரிப்பு விரிக்கப்படுவதாகவும் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் நிராகரித்த ராஜபக்சவினரை பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடு இழந்த நில உரிமையையும் பணத்தையும் ராஜபக்ச அரச குடும்பம் மீளப் பெற்றுத் தர வேண்டும் என மக்கள் கோருவதாகவும், மக்களின் குரல்களுக்கு செவிசாய்த்து ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் மக்களின் பொதுச் சொத்துக்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்தையும் மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதாகவும், மோசடிகளுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டான தேர்தல் தொகுதிஅகர கூட்டம் நேற்று (04) நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டான தொகுதியின் பிரதான அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான விஜித் விஜிதமுனி சொய்சா இதனை ஏற்பாடு செய்திருந்ததோடு, இதில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

ராஜபக்சவினர் ஆட்சியில் இல்லாவிட்டாலும், தற்போதைய அரசாங்கம் ரத்துபஸ்வல கொலைக் கலாசாரத்தை மீண்டும் உருவாக்க முயல்வதாகவும், ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இந்நாட்டு இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி மிலேச்சத்தனமான முறையில் நசுக்கப்படுவதாகவும் இளைஞர்கள் மீதான அடக்குமுறையை எதிர்க்கட்சி என்ற வகையில் முழுமையாக எதிர்ப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

மொட்டுவின் சிறைகைதியாக மாறியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க!

ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான மொட்டு அரசாங்கம் நாட்டை புதிய வறுமை நிலைக்குள் தள்ளியது எனவும், அதனால் மேல்மட்ட வாழ்வாதாரத்தைக் கொண்டிருந்தவர்கள் கூட கீழ் நிலைக்கு விழ்ந்து விட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த வரையறையற்ற அழுத்தத்தை தாங்க முடியாமல் நாட்டு மக்கள் வீதியில் இறங்கினர் எனவும், இது ஒரு அகிம்சை போராட்டமாக மாறியதோடு இதற்கு ராஜபக்சர்கள் வன்முறை மூலம் பதிலளித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டுக்கு ஒரு புதிய மாற்று தேவை என்றும், அது பாரம்பரியத்திலிருந்து விலகிய நாட்டிற்கு புதிய வேலைத் திட்டத்தையும் புதிய பாதையையும் காட்டும் மாற்றாக அமைய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி மொட்டுவின் சிறைகைதியாக மாறியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவர்களுடன் யாராவது இணைந்தால் காக்கையின் கட்டுப்பாட்டிலையே எதிர்காலத்தில் வேட்புமனுக்களை பெற வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மீரிகம தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் இன்று (04.09.22) பிற்பகல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More