Home இந்தியா காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை  தாக்குதல்-ஐவா் படுகாயம்

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை  தாக்குதல்-ஐவா் படுகாயம்

by admin

காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை  மேற்கொண்ட தாக்குதலின் போது ஐந்து மீனவர்கள்  படு காயமடைந்துள்ளதோடு,ஒருவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

-குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த இரண்டாம் திகதி இரவு காரைக்கால் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்ற 15 பேர்  கோடியக்கரைக்கு தென்கிழக்கு இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடித்துக் கொண்டிருந்த படகைச் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

  இதில் ராஜ்குமார் ,தண்டபாணி, மதன், அருண்குமார் மாணிக்கவேல் சூர்யா ஆகிய 6 பேர் பலத்த காயமடைந்த நிலையில்  இன்று (5) கரை திரும்பிய அவர்கள் காரைக்காலில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இவர்களில் படகின் உரிமையாளர் ராஜ் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சை க்கு கொண்டு செல்லப்பட்டார்.

 சம்பவம் தொடர்பாக காரைக்கால் மீன்வளத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More