Home இலங்கை தேசிய கராத்தே அணி நாடு கடத்தப்பட்டமை குறித்து விசாரணை

தேசிய கராத்தே அணி நாடு கடத்தப்பட்டமை குறித்து விசாரணை

by admin

பொதுநலவாய கராத்தே சம்பியன்ஷிப் 2022 இல் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்த இலங்கையின் தேசிய கராத்தே அணி உடனுமே நாடு கடத்தப்பட்டமை குறித்து விசாரணை நடத்த இலங்கையின் விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களம் முடிவு செய்துள்ளது.

தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்ற இலங்கை கராத்தே அணியினரிடம் ஹீத்ரோ விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து அவர்களது விசாக்கள் ரத்து செய்யப்பட்டு அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மூன்றாம் தரப்பொன்றுக்கும் தற்போதைய கராத்தே சம்மேளனத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே இவ்வாறு விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள விளையாட்டு மேம்பாட்டுத் துறை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More