Home இலங்கை 6 இந்திய மீனவர்கள் விடுதலை:

6 இந்திய மீனவர்கள் விடுதலை:

by admin



தலைமன்னார் கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லைக் கோடு ஊடாக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 06 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை(12) மன்னார் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 27 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேரும்  (28) ஆம் திகதி காலை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனா். .

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்த நிலையில் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட  மன்னார் நீதவான் இன்று திங்கட்கிழமை(12) ரை  விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்கள் 6 பேரையும் 3 வருட சிறைத்தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் எதிர் வரும் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி படகு உரிமையாளர்களுக்கான வழங்கு விசாரணை இடம் பெறும் எனவும் அன்றைய தினம் படகு உரிமையாளர் மன்றில் சமூகமளிக்காவிட்டால் படகு அரசுடமையாக்கப்படும் என நீதவான் தெரிவித்தார்.

விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் ஊடாக மிகிரியாகம முகாமிற்கு அனுப்பி நாட்டிற்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மீனவர்கள் இந்திய உயர்ஸ்தானிகர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More