Home இலங்கை இளம் பிக்குகளை துஸ்பிரயோகம் செய்த மதகுருவிற்கு விளக்கமறியல்

இளம் பிக்குகளை துஸ்பிரயோகம் செய்த மதகுருவிற்கு விளக்கமறியல்

by admin

இளம் பிக்குகளை பாலியல்  துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை  எதிர்வரும் செப்டம்பர்  மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம்  கல்முனை  காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட   விஹாரை ஒன்றில்   வைத்து 3 இளம் பிக்குகள்  துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் இன்று (13)கல்முனை நீதிமன்ற நீதிவான்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபரான பௌத்த மதகுருவை  எதிர்வரும் செப்டம்பர்  மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை  நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 இளம் பிக்குகளை கல்முனை பகுதி    விஹாரை ஒன்றில்   வைத்து துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை கைது செய்ய காவல்துறையினரினால்  நடவடிக்கை மேற்கொள்ளபட்டிருந்தது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட   இளம் பிக்குகளின் பெற்றோர் ஏற்கனவே  வழங்கிய  முறைப்பாட்டிற்கமைய  அம்பாறை பகுதியில் இருந்து சென்ற விசேட காவல்துறையினா் இன்று கல்முனை பகுதியில் உள்ள  குறித்த பௌத்த விஹாரைக்கு சென்று  விசாரணை மேற்கொண்டதுடன் சந்தேக நபரான பிரதான பௌத்த மதகுருவிடம் வாக்குமூலங்களை  பெற்று கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More