Home இந்தியா ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்கியதாக குற்றச்சாட்டு:

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்கியதாக குற்றச்சாட்டு:

by admin

 

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை (19)சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள்  நேற்று (19) மாலை   மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட  இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக  ஒலி பெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த  மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு அஞ்சி சிதறி ஓடினர். இதனையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை மீனவர்கள் கச்சத்தீவு  அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது  ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை நோக்கி கற்களை கொண்டு வீசி விரட்டியுள்ளதுடன்   மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியாபகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு அஞ்சி ராமேஸ்வரம் துறைமுகத்தை நோக்கி சென்றதாகவும் இதனால் படகு  ஒன்றுக்கு சுமார் 70 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஜெகதாபட்டிணம்  மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த  நிலையில், இன்று காலை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்களை கொண்டு  வீசி தாக்குதல் நடத்திய  சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More