Home இலங்கை வசந்த முதலிகேயின் உயிருக்கு ஆபத்து

வசந்த முதலிகேயின் உயிருக்கு ஆபத்து

by admin

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயின் உயிருக்கு ஆபத்து காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, இன்று நாடாறுமன்றில் தொிவித்துள்ளாா்.

வசந்த முதலிகே இரவு நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் அவா் தப்பிச் செல்ல முயன்றார் எனக்கூறி அவரைக் கொலை செய்யும் ஆபத்து காணப்படுவதாகவும் சஜித் பிரேமதாஸ சபையில் தொிவித்துள்ளாா்.

இலங்கையின்  மனித உரிமைகள் தொடர்பில் ஜெனிவாவில் பேசப்படும் தற்போதைய காலகட்டத்தில் அரசாங்கம் இவ்வாறு நடந்துக்கொள்வது சரியா? எனக் கேள்வி எழுப்பிய சஜித் பிரேமதாஸ இந்த விடயத்தில் நடந்திருப்பது அரச பயங்கரவாதமே எனவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீதும் இந்த அரசாங்கம் தாக்குதலை மேற்கொள்கிறது எனவும் தெரிவித்தார். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More