Home இலங்கை இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

by admin

பலம் வாய்ந்த நாடுகள் கூட்டாக இணைந்து இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நாளை (06) சமர்ப்பிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

ஜெனிவாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தொிவித்த அவா் மனித உரிமையை ஆயுதமாக பயன்படுத்தி இலங்கையை வாழ்நாள் முழுவதும் கட்டுப்படுத்த அந்நாடுகள் முயற்சிப்பதாக தொிவித்துள்ளாா்.

அமெரிக்கா, பிாித்தானியா , கனடா, வடக்கு அயர்லாந்து, வடக்கு மசிடோனியா, ஜெர்மன், மலாவி மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய மத்திய குழு இந்த தீர்மானத்தின் வரைபை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் 19 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இதன் முதலிரண்டு விடயங்களிலும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கையால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது

யோசனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள 19 விடயங்களில் 9 விடயங்கள் பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மை நாட்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் உணவு பாதுகாப்பின்மை, பாரிய எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய மருந்து பற்றாக்குறை மற்றும் குடும்ப அலகுகளின் வருமானம் குறைதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மேலும் பொருளாதார மந்த நிலை காரணமாக மனித உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைதியான போராட்டங்களில் கலந்துகொண்டவர்களை கைது செய்தல் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு எதிரான வன்முறையின் போது உயிரிழப்புகள் –  காயங்கள் – சொத்துகள் அழிப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை உடனடியாக விசாரணை செய்து, அதற்கு பொறுப்பான தற்போதைய மற்றும் முன்னாள் அரசாங்க அதிகாரிகள் தொடர்பில் சுயாதீனமான, பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது.

மனித உரிமைகளை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் சிவில் செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதை நிறுத்தவும், அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தவும் குறித்த யோசனையின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை அமர்வில் ஆணையாளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கையில், இலங்கையில் இடம்பெற்று வரும் பொருளாதார குற்றங்கள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More