Home உலகம் ஆங் சான் சூகியின் சிறைத்தண்டனை 26 ஆண்டுகளாக நீடிப்பு

ஆங் சான் சூகியின் சிறைத்தண்டனை 26 ஆண்டுகளாக நீடிப்பு

by admin

மியன்மாரின் ஜனநாயகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் ஆங் சான் சூகிக்கு தேர்தல் முறைகேடு வழக்கில் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 11 வழக்குகளில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது. இதில் இரண்டு , மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை 26ஆக நீடிக்கப்பட்டுள்ளது

மியன்மாரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்திய ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி கடந்த 2020 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியை பிடித்த போதிலும் தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக தொிவித்து கடந்த ஆண்டு பெப்ரவரியில் ராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

அதனையடுத்து ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதுடன் அவர் மீது ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, அலுவலக ரீதியான சட்டங்களை மீறியது, ஊழல் முறைகேடுகள் என வழக்குகள் தொடரப்பட்டன.

இவை தொடர்பான விசாரணை மியன்மார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில் கடந்த டிசம்பரில் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், பின்னா் பல்வேறு வழக்குகளில் 17 ஆண்டுகள் வரை தண்டனையை நீடித்தது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை 26ஆக நீடிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More