Home இலங்கை கொள்ளை சம்பவங்களுடன்  தொடர்பு என மூதாட்டி கைது

கொள்ளை சம்பவங்களுடன்  தொடர்பு என மூதாட்டி கைது

by admin

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன்  தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் மூதாட்டி ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட  உடுப்பிட்டி மற்றும் வல்வெட்டி ஆகிய பகுதிகளில் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டிலையே வடமராட்சி ஊரிக்காடு பகுதியை சேர்ந்த மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட  விசாரணையின் அடிப்படையிலையே குறித்த மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடமிருந்து 8 பவுன் தாலி, ஒரு கிராம் 630 மஞ்சாடி நிறையுடைய தோடு, 625 மில்லி கிராம் நிறையுடைய பஞ்சாயுத பென்டன், என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், வங்கிகளில் அடகு வைத்த பற்றுச்சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பெண் வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More