இலங்கை பிரதான செய்திகள்

மூளாயில் வீடு புகுந்து இலத்திரனியல் பொருட்கள் திருட்டு 

யாழ்ப்பாணத்தில் இருந்து வீட்டார் மட்டக்களப்பு சென்ற  சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குறித்த வீட்டினுள் புகுந்து இலத்திரனியல் பொருட்களை திருடிய குற்றத்தில் நபர் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

வட்டுக்கோட்டை காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட மூளாய் பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று மட்டக்களப்பில் உள்ள தமது உறவினர் வீடொன்றுக்கு சென்று நேற்றைய தினம் புதன்கிழமை வீடு திரும்பிய போது , வீட்டில் இருந்த தொலைக்காட்சி உள்ளிட்ட  இலத்திரனியல் பொருட்கள் திருட்டு போயுள்ளமையை அவதானித்து அது தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து காவல்துறையினர் , மூளாய் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அவரிடமிருந்து திருடப்பட்ட இலத்திரனியல் பொருட்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.