Home இலங்கை யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல்!

யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல்!

by admin

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் செல்லத்துரை புருசோத்தமனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால்  முன்னெடுக்கப்பட்டது. 

இதன் பொழுது செல்லத்துரை புருசோத்தமனின் நினைவுருவபடத்திற்கு பல்கலை மாணவர்ளால் ஈகைச்சுடரேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தி அகவணக்கமும் இடம்பெற்றது.

தொடர்சசியாக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சி.ஜெல்சினால் நினைவுரையும் இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவரான புருசோத்தமன் இக்கட்டான காலப்பகுதியில் (2006-2007) கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவராகப் பொறுப்பேற்று மாணவர் நலனிலும் பல்கலைக்கழக நலனிலும் அக்கறை கொண்டு செயற்பட்டதுடன் தமிழ்த்தேசிய நலனிலும் பற்றுடையவராகத் திகழ்ந்தார். 

இந்த நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி சுட்டு படுகொலை செய்யப்பட்டார். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More