Home இந்தியா மீனவா்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

மீனவா்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

by admin


கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை இரவு  2 படகுகளுடன் கைது செய்தமைக்கு எதிா்ப்புத் தொிவித்து இன்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலை  நிறுத்த போராட்டம் ஆரம்பித்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து  சனிக்கிழமை 539 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவுக்கும்,நெடுந்தீவு க்குமிடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் 2 படகுகளுடன் அவா்களை சிறைபிடித்தனர்.

அதிலிருந்த   15 மீனவர்களையும் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று பின்னா் அவா்கள் மன்னார் நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

இதையடுத்து, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சாா்பில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில்,    ராமேஸ்வரம்     மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடா்ந்து கைது செய்வதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், படகுகள், மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்வது, செவ்வாய்க்கிழமை தங்கச்சிமடம் பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவது, அதன் பின் அடுத்தகட்டப் போராட்டம் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து இன்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலை  நிறுத்த போராட்டம் ஆரம்பித்துள்ளனா். இதனால், இன்று திங்கட்கிழமை காலை மீன்பிடிக்கச் செல்லவில்லை.இதனால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள், கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் நேரடியாகவும்,மறைமுகமாகவும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்திருக்கிறார்கள்  மேலும்,நாள் ஒன்றுக்கு 5  கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More