Home இலங்கை வடக்கு ஆளுநருக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறையிட தீர்மானம்

வடக்கு ஆளுநருக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறையிட தீர்மானம்

by admin
 வடக்கு ஆளுநரால் நிறைவேற்றப்பட்ட நியதி சட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளோம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்தார். கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார், மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு ஆளுநர் கடந்த 27ஆம் திகதி நியதி சட்டங்கள் என்று சொல்லப்படுகின்ற இரண்டினை வர்த்தமானியில் பிரசுாித்துள்ளார். ஒன்று வாழ்வாதாரம் தொடர்பான விடயம் மற்றும் சுற்றுலா தொடர்பான விடயங்கள் என்ற இரண்டு நியதிச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளார். இந்த இரண்டுமே ஆளுநருடைய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதும், சட்டவிரோதமானதும், முறையற்றது. மாகாண சபைகள் சம்பந்தமான அரசியலமைப்பு மற்றும் மாகாண சபைகள் கட்டளை சட்டத்திற்கு முரணானது.

மாகாண சபை சட்டத்தின் படி ஆளுநர் தனது அதிகாரங்களை ஜனாதிபதியின் பணிப்புரையின் பெயரால் செயல்படுத்த முடியும் என்றுள்ளது. எனவே ஆளுநருக்கு சட்ட வாக்க அதிகாரம் எந்த இடத்திலும் கொடுக்கப்படவில்லை. எந்த இடத்திலும் ஆளுநர் சட்டம் இயற்றலாம் என்று குறிப்பிடப்படவில்லை. இவர் துணிவாக எதேர்ச்சியதிகாரமாக இரண்டு நியதி சட்டங்களை பிரகடனப்படுத்தியுள்ளார். இருக்கக்கூடிய அதிகாரங்களையும், ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஆளுநர் பறித்தெடுக்கின்றார் என்பதே விடயம். அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இது பாரதூரமான ஒரு விடயம். அரசியல் ரீதியாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். அரசியல் ரீதியில், எங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களையும் பறிக்கக் கூடிய ஒரு செயற்பாடாக காணப்படுகின்றது. எனவே இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவதற்கு நாங்கள் தீர்மானித்து உள்ளோம் என்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More