Home இலங்கை சிறுநீரக கடத்தலுடன் தொடர்புடைய தரகருக்கு விளக்கமறியல்

சிறுநீரக கடத்தலுடன் தொடர்புடைய தரகருக்கு விளக்கமறியல்

by admin

பொரளையிலுள்ள  தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற சிறுநீரக கடத்தலுடன் தொடர்புடைய தரகர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  அன்றைய தினம் சந்தேகநபரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் மேலதிக நீதவான், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்கேநபர், இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்பபடுத்தப்பட்ட போதே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும்  குறித்த தனியார் வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி உள்ளிட்ட 6 பணிப்பாளர்களுக்கு வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வறிய குடும்பங்களுக்கு பணம் பெற்றுத் தருவதாகக் கூறி, முன்னணி வைத்தியசாலைகளுக்கு சிறுநீரகங்களை பெற்றுக்கொடுத்த பின்னர், பணம் வழங்காமை தொடர்பில் 05 பேரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, கொழும்பு  -15, கஜிமாவத்தையை சேர்ந்த 41 வயதான ஒருவர் கைது  செய்யப்பட்டார். குறித்த நபா் சிறுநீரகங்களை பணத்திற்காக வழங்கும் நபர்களுக்கும் அதனை பெற்றுக்கொள்ளும் தரப்பினருக்கும் இடையில் தரகராக   செயற்பட்டுள்ளார். அவர் தரகுப் பணத்திற்கு மேலதிகமாக சிறுநீரகத்திற்காக வழங்கப்பட்ட பணத்திலும் ஒரு பகுதியை மோசடி செய்துள்ளதாகவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More