Home இலங்கை மண்டபத்தில் இருந்து கடல் வழியாக தப்பி சென்ற இருவர் கைது!

மண்டபத்தில் இருந்து கடல் வழியாக தப்பி சென்ற இருவர் கைது!

by admin

 

இந்தியா, தமிழக மண்டபம் முகாமில் இருந்து தப்பி வந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்துறை காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகம் சென்று இருந்தனர்.

அங்கு அவர்களை தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினர் விசாரணை செய்த பின்னர் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் மண்டபம் முகாமில் இருந்து தப்பியோடிய இருவரும் , தமிழகத்தில் இருந்து படகொன்றில் சட்டவிரோதமான முறையில் யாழ்ப்பாணம் வேலணை கடற்பரப்பினூடாக இலங்கையை சென்றடைந்த போது கடல் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த, கடற்படையினரால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More