Home இலங்கை கஜ முத்துக்களை கடத்திய மூன்று சந்தேக நபர்களிடம் விசாரணை  

கஜ முத்துக்களை கடத்திய மூன்று சந்தேக நபர்களிடம் விசாரணை  

by admin

 

5 கஜமுத்துக்களை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்று கைதான  3 சந்தேக நபர்களிடம்  விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை(11) இரவு  கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து      மகாஓயா இலங்கை வங்கிக்கு அருகில் வைத்து 3 சந்தேக நபர்கள் 5 கஜமுத்துடன் திங்கட்கிழமை(12) அதிகாலை கைது  செய்யப்பட்டனர்.
மேலும் கைதானவர்கள் பிபிலை பண்டாரவளை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன்   பிபிலையில் இருந்து   மகாஓயாவிற்கு   கஜமுத்துக்களை வியாபாரத்துக்காக    முச்சக்கரவண்டியில் கடத்தி சென்ற நிலையில்   விசேட அதிரடிப்படையினர் இடைமறித்து சோதனை மேற்கொண்டு  கைது செய்துள்ளனர்.
அத்துடன்  கைது செய்யப்பட்டவர்கள்   53, 34 , 36 வயதுடையவர்களாவர். மீட்கப்பட்ட கஜமுத்துக்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டி ஆகியன மகாஓயா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தவிர கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More