Home இலங்கை சென்னை விமான நிலையத்தில், யாழ் பெண்கள் கைது!

சென்னை விமான நிலையத்தில், யாழ் பெண்கள் கைது!

by admin

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு செல்லும் நோக்குடன் சென்ற  இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சென்னை முகவரிகள் கொண்ட, இந்திய கடவுச்சீட்டுடன் சென்ற  நிலையில், ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்த போது இரண்டுமே போலியான கடவுச்சீட்டுக்கள் என தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, 46 வயதுடைய கங்கா சுந்தரதாசன், 22 வயதுடைய  சொர்ணகலா சுந்தரேசன்  என்ற பெண்களின் பயணங்களையும், குடியுரிமை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

காவற்துறையினரின் விசாரணையில், இவர்கள் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து, சுற்றுலா பயணிகள் விசாவில் சென்னைக்கு சென்று, அங்கேயே நிரந்தரமாக தங்கி இருந்ததாக தெரியவந்துள்ளது.

அவர்கள், ஏஜெண்டுகளிடம் பணம் கொடுத்து போலியான இந்திய கடவுச்சீட்டுக்கள் பெற்றுள்ளனர். தற்போது, சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல முயன்றனர் என்று தெரிய வந்தது.

பின்னர் சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், 2 பெண்களையும் கைது செய்ததுடன் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More