Home உலகம் பிரித்தானிய பிரதமர் ரிஷி இரண்டாவது தடவையும் அபராதம் செலுத்துகிறார்!

பிரித்தானிய பிரதமர் ரிஷி இரண்டாவது தடவையும் அபராதம் செலுத்துகிறார்!

by admin

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்குப் காவற்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். காரின் பின்பக்க ஆசனத்தில் அமர்ந்து பயணித்த அவர் ஆசனப் பட்டி அணியாமல் பயணம் செய்தமைக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தனது பிழையை முழுமையாக ஏற்றுக் கொண்டு அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன் அபராத தொகையை பிரதமர் செலுத்துவார என இலக்கம் 10, டவுணிங் வீதி பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வாகனங்களில் ஆசனப் பட்டி அணியாமல் பயணம் செய்பவர்கள் தவறை ஏற்றுக்கொண்டால் உடனடியாக நூறு பவுண்ட்ஸ் தொகையை அபராதமாகச் செலுத்த முடியும். ஆதனை ஏற்க மறுத்து நீதிமன்றம வரை சென்றால் அது 500 பவுண்ட்ஸ் வரை அதிகரிக்கலாம் எனபது நடைமுறையாக இருந்து வருகிறது.

ரிஷி சுனாக் அண்மையில் இங்கிலாந்தின் வடக்குப் பகுதிகளில் பயணம் மேற்கொண்டிருந்த போது லான்காஷயார் (Lancashire) பகுதியில்

காரில் பின்னால் அமர்ந்தவாறு காணொளிப் பதிவு ஒன்றைத் தனது இன்ஸ்ரகிராம் சமூகவலைத் தளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த காணொளியில் அவர் ஆசனப் பட்டி அணியாமல் இருப்பது பகிரங்கமாகத் தெரியவந்தது.

நாட்டின் செலவீனங்களை ஒரு நிலைப்படுத்துவது தொடர்பான தனது அரசின் திட்டங்கள் பற்றி அந்த காணொளியில் அவர் பேசியிருந்தார். பிரதமரது பொறுப்பற்ற இந்தச் செயல் பொறிஸ் ஜோன்சனின் அதே அலட்சியத்தைப் பின்தொடர்வதைக் காட்டுகிறது என எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.

ரிஷி சுனாக் அண்மைக் காலத்தில், இரண்டாவது முறையாக, காவற்துறையின் அபராதத்தை  செலுத்தியுள்ளார்.  கடந்த ஏப்ரலில் அப்போதைய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மற்றும் அவரது துணைவியார் சகிதம் கொரோனாத் தொற்று நோய்ச் சுகாதார விதிகளை மீறி பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றில் கலந்து கொண்டமைக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More