செல்லுபடியாகும் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 40 வயதான நைஜீரிய பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிரிஹான காவல் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (22.01.23) மிரிஹான கங்கொடவில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் ஒரு மடிக்கணினி ரக கணினியை காவற்துறையினர் கைப்பற்றினர்.
குறித்த நபர் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்ட நபரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சந்தேக நபர் இன்று (23) கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
Spread the love
Add Comment