உலகம் பிரதான செய்திகள்

பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகாிப்பு

பாகிஸ்தான் பெஷாவர் நகரில் மசூதி  மசூதியில் நேற்று (30)  மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிாிழந்தவா்களின்  எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.   குறித்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு உாிமை கோாியுள்ளமை குறிப்பிடத்தக்கது

பாகிஸ்தானில் மசூதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 34 பேர் பலி

Jan 30, 2023 at 14:45

பாகிஸ்தான் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் 34 பேர்  கொல்லப்பட்டுள்ளனா். மசூதியில் அதிகளவில் தொழுகையாளர்கள்  தொழுகையில் ஈடுபட்டிருந்த  போது இடம்பெற்ற  இந்த குண்டுவெடிப்பில், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

குண்டு வெடிப்பில் மசூதியின் ஒரு பகுதி தகர்ந்துள்ளதாகவும்  இடிபாடுகளுக்கு இடையே மக்கள் சிக்கியிருப்பதாகவும், சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

குண்டுவெடிப்பிற்கான காரணம்  மற்றும் குண்டு வெடிப்பினை யாா் மேற்கொண்டாா்கள்  என்பது குறித்த தகவல்கள் முழுமையாக வெளிவரவில்லைவில்லை.   உயிாிழந்தவர்களில் பெரும்பாலோர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களே இந்தத் தாக்குதலாளிகளின்  இலக்கு எனவும் நம்பப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் பெஷாவரில் உள்ள ஷியா மசூதி ஒன்றில்  மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பு  தாக்குதலில்  பலா் கொல்லப்பட்டிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.