Home இந்தியா எல்.ஐ.சி. – ஸ்டேட் வங்கி முன்பு காங்கிரஸ் போராடவுள்ளது!

எல்.ஐ.சி. – ஸ்டேட் வங்கி முன்பு காங்கிரஸ் போராடவுள்ளது!

by admin

அதானி குழுமத்தில் முதலீடு செய்த எல்.ஐ.சி. நிறுவனம் முன்பும், கடன் வழங்கிய ஸ்டேட் வங்கி முன்பும் காங்கிரஸ் சார்பில் வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) போராட்டம் நடக்கவுள்ளது. நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி. மற்றும் ஸ்டேட் வங்கி கிளைகள் முன்பு இந்த போராட்டம் நடக்கவுள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மத்திய அரசு பொதுமக்களின் பணத்தை தங்களின் நெருங்கிய நண்பர்களுக்கு ஆதரவாக பயன்படுத்துகிறது. இதை கண்டித்து நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி. மற்றும் ஸ்டேட் வங்கி அலுவலகங்கள் முன்பு வருகிற 6-ந்தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

எல்.ஐ.சி. மற்றும் ஸ்டேட் வங்கி போன்ற பொதுத்துறை நிறுவனம் மற்றும் வங்கிகளை அதானி குழுமத்துக்கு ஆதரவாக பயன்படுத்துவதால் நடுத்தர மக்களின் சேமிப்பில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க ஆய்வு நிறுவனம் மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி ஆய்வறிக்கை வெளியிட்டது. இதை அதானி குழுமம் மறுத்துள்ளது. ஆனாலும் அதானி குழும பங்குகளின் மதிப்பு 8.22 லட்சம் கோடி ரூபாய் சரிந்தது.

அதானி குழுமத்தில் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களிலும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. பெரும் முதலீடுகளை செய்துள்ளது. கடன் மற்றும் பங்குகள் வகையில் 36,474 கோடி ரூபாயை எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ளது.

மேலும் ஸ்டேட் வங்கி, அதானி குழுமத்துக்கு கடன் வழங்கியுள்ளது. ஆனால் சொத்துக்கள் அடிப்படையிலேயே கடன் வழங்கியுள்ளதாக ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More