Home இலங்கை பல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்தவர் கைது

பல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்தவர் கைது

by admin
பல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையக காவல்துறையினா்  கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட பிரதான அரச பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நபர் ஒருவர்  பல கடவுச்சீட்டுக்களை நபர்களிடம் பெற்று வருவதாக காவல்துறை விசேட பிரிவு பொறுப்பதிகாரிக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.
வியாழக்கிழமை(23)   இதற்கமைய சம்பவ இடத்திற்கு  சென்ற  கல்முனை தலைமையக காவல்துறையினா்     சுற்றி வளைத்து தேடுதல் ஒன்றினை மேற்கொண்டனர். இதன் போது மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி பகுதியை சேர்ந்த 51 வயது மதிக்கத்தக்க மைக்கல் மணிமேகலன் என்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என கூறி சிலரிடம் பெற்றுக்கொண்ட  கடவுச்சீட்டுக்களுடன் கைதானார்.
  கைதான நபர் கல்முனை தலைமையக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.குறித்த நபரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில்  வங்கி கணக்கின் ஊடாக பலரிடம் பணக்கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேக நபர் வசம் இருந்த கடவுச்சீட்டுக்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்கள் காவல்  நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இவ்வாறு வரவழைக்கப்பட்டவர்கள் அனைவரும் நற்பிட்டிமுனை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் தமது கடவுச்சீட்டுக்களை சந்தேக நபரிடம் மத்திய கிழக்கு வேலைவாய்ப்பிற்காக வழங்கியதாகவும் அதற்காக சந்தேக நபரின் வங்கி கணக்கிற்கு பெருந்தொகையான பணத்தை வைப்பிலிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
காவல்துறையினா் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் வாக்குமூலங்களை பெற்றுள்ளதுடன்   கைதான சந்தேக  நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்புகின்ற  வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரா அல்லது இடை தரகரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More